
ஊரோடி
ஊரவர் பலரின் உயிரைக்
காவு கொண்டவன் தான்
அறங்காவற்குழுவின்
காவலன்!
ஊரின் அழிவுக்கு
வித்திட்டவன் ஊர்தியில் ஊர்வலம்
உயிரைக் கையில் பிடித்தவன்
நடைப்பிணம்!
பல்லக்குத் தேடும் பரதேசி
உதிரக் கறையை அலசி
காற்றுவாக்கில் ஆண்டியாய்
ஊர்உலா!
www.vaanavarkhon.net.tc