ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

வன்னி மக்கள் - கவிதை



வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
தேனீ தேன் சேர்க்குமாப் போல்
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்
செதுக்கிய வீட்டுடன்
சொத்திழந்து
உயிரைத் தப்புவிக்க
உண்ண உணவோ
உடுக்க உடையோ யின்றி
நடைப் பிணமாய்
பரதேசியால் அலைந்து
வந்து விழும் வெடிகுண்டில்
சதைப்பிண்டங்கள் சிதிலமடைய
உறவுடன்
கூடவிருந்தவர்களை இழந்து
இலக்கங்களே நாமமென
முகவரியிழந்த மனிதர்களாய்
வானத்தைக் கூரையாக்கி
வாழ நிர்ப்பந்திக்கபட்ட
ஊனமுற்ற உயிரினம்!

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

4 கருத்துகள்:

  1. உணர்வுள்ள கவிதை...என்னத்தச் சொல்ல.

    பதிலளிநீக்கு
  2. எப்படிச் சொல்ல கருணாகரசு,
    எம்மினத்திற்குத் திணிக்கப்பட்ட கொடூரத்தை!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உன் வரிகளுக்குள் வீழ்ந்த
    என் இதயம்
    வலிகளை சூடிக்கொண்டு
    துடிக்கின்றது வலி சுமந்து......;

    எந்தன் உயிர்களுக்கேன் இந்நிலை....?
    இறைவன் இருக்கின்றானா???
    முடியவில்லை முன் போல் சிரிப்பதற்கும்
    சீரற்ற காலநிலையாய்
    எம் உறவுகளின் வாழ்க்கை
    மாற்றம் பெற்ற பிறகு

    சிறந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //உன் வரிகளுக்குள் வீழ்ந்த
    என் இதயம்
    வலிகளை சூடிக்கொண்டு
    துடிக்கின்றது வலி சுமந்து......;

    எந்தன் உயிர்களுக்கேன் இந்நிலை....?
    இறைவன் இருக்கின்றானா???
    முடியவில்லை முன் போல் சிரிப்பதற்கும்
    சீரற்ற காலநிலையாய்
    எம் உறவுகளின் வாழ்க்கை
    மாற்றம் பெற்ற பிறகு

    சிறந்த கவிதை
    வாழ்த்துக்கள்//

    நன்றி கீர்த்தி,

    அரவணைப்பார்
    எவருமின்றி
    நாதியற்று
    மௌனித்து
    கிடக்கிறது
    தமிழினம்.

    பதிலளிநீக்கு

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails