
எழுதுகோலின்
மகவுக்கு
மங்கல
வெளியீடு...!
* * *
புத்தக
இடுக்கிலிருந்து
நலிந்துபோன
படைப்புக்கு
வெள்ளோட்டம்...!
* * *
இருண்ட
வாழ்வின்
அஞ்ஞாதவாச
அரங்கேற்றம்...!
* * *
இடையை
அளக்க
அவையினருக்கு
அரிய சந்தர்ப்பம்...!
* * *
விதவைக்
கடதாசிக்கு
குங்குமப் பொட்டிட்ட
சுமங்கலி
வாழ்க்கை...!
* * *
கலைப் பிரியர்களுக்கு
ஒரு தாயின்
கண்ணீர்க்
காணிக்கை...!
(ஜூலை.02,ஜூலை.08, 1995 தினமுரசு பத்திரிகையில் "தேன்கிண்ணம்" பகுதியில் பிரசுரமாகியது)
www.vaanavarkoon.tk
பிரசுரமான காகித இலக்கியச் சுவடிகளை கணினி யுகத்துக்கு பதிவேற்றம் செய்யும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கதே, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி தீவிரவாசகன்.
பதிலளிநீக்கு