
சிவப்பாய்
மனித
மணமுள்ள
மண்!
* * *
சுற்றம்
சூழல்
சகதியாய்ச்
சுடுகாடு!
* * *
வெடிச்
சத்தம்
அருகில்
சப்பாத்துக்
காலரவம்!
* * *
மாலையில்
வல்லூறு
வௌவால்
ஊழையிடும்
நாயொலி!
* * *
குற்றுயிராய்க்
குதறிய
கேட்பாரற்ற
மனிதம்!
* * *
இவை...
* * *
துப்பாக்கி
உமிழ்ந்த
உவகையின்
எச்சங்கள்!
(17 - 23, செப்டம்பர் 1995 தினமுரசு பத்திரிகையின் தேன்கிண்ணம் பகுதியில் பிரசுரமாகியது)
www.vaanavarkoon.tk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk